முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

காத்மாண்டு : நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.  நேபாளத்தில், கடந்த 2015-ம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தை சீர்குலைத்த இந்த நிலநடுக்கத்தால், 9 ஆயிரம் பேர் பலியாகினர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து