முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை ‘ஆ’ மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் ‘ஆ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘அ’ மண்டலம், சேத்துமடைக் கால்வாய் ‘ஆ’ மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ‘ஆ’ மண்டலம் ஆகியவற்றின் பாசனப் பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை ‘ஆ’ மண்டலத்தின்  பொள்ளாச்சி கால்வாய் ‘ஆ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘அ’ மண்டலம் சேத்துமடைக் கால்வாய் ‘ஆ’ மண்டலம்  மற்றும் ஆழியார் ஊட்டுக் கால்வாய் ‘ஆ’ மண்டல பாசனப் பகுதிகளுக்கு 4.11.2019 முதல் உரிய இடைவெளி விட்டு 70 நாட்களுக்கு  மொத்தம்  2250 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.  இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22,332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து