முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டங்கள்: விக்கிரவாண்டியில் 8-ம் தேதி முதல்வர் பேசுகிறார் - நாங்குநேரியில் 5-ம் தேதி துணை முதல்வர் பேச்சு

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க. நன்றி அறிவிப்பு விழா பொதுக்கூட்டங்கள் வரும் 5 மற்றும் 8 தேதிகளில் நடைபெறுகிறது. விக்கிரவாண்டியில் வரும் 8-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், 5-ம் தேதி நாங்குநேரியில் துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் தலைமையிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

அ.தி.மு.க. ஆட்சி ஏழை, எளியோரின் வேதனைகளை தீர்க்கின்ற ஆட்சி. தாய்மார்களின் இதயங்களில் இன்பங்களை சேர்க்கின்ற ஆட்சி. நடுத்தர மக்களுக்கு நன்மைகளை தருகின்ற ஆட்சி. எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற ஆட்சி என்ற புதிய வரலாற்றை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். அவர் உருவாக்கிய அந்த வரலாற்றை தமிழ்நாட்டின் வீர வரலாறாக எவராலும் வீழ்த்த முடியாத வெற்றி வரலாறாக மாற்றிக்காட்டியவர் ஜெயலலிதா. அ.தி.மு.க. தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றத் தோன்றிய ஆயிரம் காலத்து பயிர் என்றார் ஜெயலலிதா. நம் இயக்கத்தை வெல்வதற்கு இனி அவர் பிறந்து தான் வர வேண்டும் என்றும் நம் அம்மா பெருமை கொள்வார். நடந்து முடிந்த தேர்தலில் இவை அனைத்தும் உண்மையாகி இருக்கிறது.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோரது வழியில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசின் மகத்தான சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அடுத்து வர இருக்கும் உள்ளாட்சித்தேர்தலிலும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. அனைவரும் வியக்கத்தக்க வெற்றி பெறும் என்பதை முன்னறிவிக்கும் வகையிலும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு பிரம்மாண்ட வெற்றியை வழங்கி இருக்கும் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 5-ம் தேதி மாலை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்குநேரியிலும், 8-ம் தேதி மாலை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் விக்கிரவாண்டி தொகுதியிலும் மாபெரும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும். இந்த பொதுக்கூட்டங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்காக சம்பந்தப்பட்ட தொகுதிகளில் பணியாற்றிய தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும், தலைமைக்கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து