முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷியாவில் பயங்கரம்: எண்ணெய் கப்பலில் வெடி விபத்து: 2 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : ரஷியாவில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

ரஷியாவின் நகோட்கா துறைமுகத்தில் 4-வது முனையத்தில் ஜாலிவ் அமெரிக்கா என்ற எண்ணெய் கப்பலில் நேற்று முன்தினம் எரிவாயு மற்றும் வாயு கலவை பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாலுமிகள் அலறினர். இந்த வெடிவிபத்தில் 3 மாலுமிகள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் 2 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. எஞ்சிய ஒருவர் ஆழ்கடலுக்குள் போய்விட்டார். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் பல கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.  இந்த தகவல்களை மத்திய கடல் மற்றும் நதி போக்குவரத்து செய்தி தொடர்பாளர், ‘ஸ்புட்னிக்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து