முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி அ.தி.மு.க.செயலாளர் புருஷோத்தமன் மறைவு - அ.தி.மு.க.விற்கு பேரிழப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி : புருஷோத்தமன் மறைவு அ.தி.மு.க.விற்கு பேரிழப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மறையத மரியாதைக்குரிய புருஷோத்தமன் தன்னுடைய தோட்டத்திலே மரத்தடியில் நின்றுகோண்டு இருந்த பொழுது விஷ வண்டு தாக்கியது.  தாக்கப்பட்டவுடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு 72 வயதாகிறது. கழகத்திலே பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கின்றார். புதுச்சேரி மாநில புறநகர் கழக செயலாளராகவும், புதுச்சேரி மாநில கழக செயலாளராகவும், புதுச்சேரி மாநில விவசாய பிரிவு செயலாளராகவும் பணியாற்றியுள்ளவர். இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து பணியாற்றி,பொதுமக்களிடத்தில் நன்மதிப்பை பெற்றவர். அவர் பொறுப்பில் இருந்த காலகட்டத்திலே கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நல்ல முறையில் பணியாற்றி கழகத்திற்கு வலுசேர்த்தவர். அவரது இழப்பு கழகத்திற்கு பேரிழப்பு என்பதை இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகிறேன்.அதோடு அவரை இழயது வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், புதுச்சேரி கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தினையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு ஐந்து மகள், ஒரு மகன் உள்ளார்கள். அனைவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அவர் எளிமையானவர், இனிமையாக பழகக் கூடியவர், கட்சி என்று சொன்னால் அதற்கு சிறப்பான முறையில் பணியாற்றக்கூடிய திறமையானவரை அம்மா அவர்கள், புதுச்சேரி மாநில செயலாளராக நியமித்தார். அவர் சிறந்த முறையில் பணியாற்றியவர். இன்றைய தினம் மறைந்திருக்கின்றார்.அவருடைய மறைவு கழகத்திற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து