முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், தே.மு.தி.க. கட்சியின் வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் சதீஸ் மற்றும் பார்த்தசாரதி ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தே.மு.தி.க.வின் கட்சி வளர்ச்சி பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக முன்னெடுப்பது தொடர்பாகவும், அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் தே.மு.தி.க. வுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் வெற்றி பெறுவதற்கு கட்சி தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு முகாம்களை நடத்திட வேண்டும் என்றும், ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தே.மு.தி.க. வலியுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து