எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரமக்குடி - நடிகர் கமலஹாசனின் 65 வது பிறந்த நாள் விழா, அவரது தந்தை விடுதலை போராட்ட வீரர் வக்கீல் சீனிவாசன் சிலை திறப்பு விழா மற்றும் மய்யம் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா ஆகியவை பரமக்குடி அருகேயுள்ள தெளிச்சாத்தநல்லூரில் நடந்தது.
விழாவில் நடிகர் கமலஹாசன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.விழாவின் தொடக்கமாக மரக் கன்றை நட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியினை நடிகர் கமலஹாசன் ஏற்றி வைத்தார்.கட்சியின் மாநில துனைத் தலைவர் மகேந்திரன் வரவேற்றார்.பின்பு, நடிகர் பிரபு, கட்சியின் பொதுச் செயலாளர் குமாரவேல், பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் கமலஹாசனை வாழ்த்திப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து நடிகை சுகாசினி கமலஹாசனின் குடும்ப உறுப்பினர்களான அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து கமலஹாசனின் சிறுவயதில் தூக்கி வளர்த்த தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரையும் ,கமல் தந்தை சீனிவாசன் சிலையினை வடிவமைத்த வேன்ஸ் என்பவரையும் கமலஹாசன் கவுரவித்தார்.பின்பு ஒரிஸ்ஸா பல்கலைக் கழகத்துடன் இணைந்து தெளிச்சாத்தநல்லூரில் தொடங்கப் படவுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதனை தொடர்ந்து, நடிகர் கமலஹாசன் அவரது தந்தை சீனிவாசனின் உருவச்சிலையினை திறந்து வைத்து மலர்மாலை அணிவித்து வணங்கினார்.பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவில், நடிகர் கமலஹாசன் பேசியதாவது :-
எனது பிறந்த நாளும்,தந்தை மறைந்த நாளும் ஒன்றாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.நான் நன்றாக வருவேன் என எனக்காக பல திட்டங்களை தினமும் தீட்டிக் கொண்டிருந்தார் எனது தந்தை.பின்பு காலேஜில் சேர்ந்து ஐ.ஏ.எஸ் .படிக்கச் சொன்னார். உடனே நான் முதலில் எஸ்.எஸ்.எல்.சி.பாஸ் பண்ண வேண்டும்.பின்பு படிக்க வேண்டும். இயக்குநர் பாலச்சந்தர் காட்டிய வழியில் செல்கிறேன் என கூறினேன்.எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் திறமையானவர்கள்.அற்புதமான குடும்பம்.தலைமை பொறுப்பிற்கு தகுதியாக திகழ்ந்தவர் எங்கள் அப்பா.
எனக்கு அவரது ரெளத்திரமும் பிடிக்கும், நகைச்சுவையும் பிடிக்கும்.அது என்னுடன் வந்திருப்பது மகிழ்ச்சி.அவர் விட்ட விதை அவர் காட்டிய வழிதான் இங்கு திறன் மேம்பாட்டு பயிற்சியாக வந்துள்ளது.
சென்னை சென்ற எனக்கு நிழலாக இருந்த பாலச்சந்தருக்கு சென்னையில் அலுவலகத்தில் சிலை திறக்கவுள்ளேன். இது பூஜைக்கான உருவம் அல்ல. பின்தொடர வேண்டிய உருவங்கள்.எனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசான்கள் எல்லாம் மெல்ல மெல்ல தகப்பனார்களாக மாறிவிட்டனர்.
கமலஹாசன் என்ன படித்திருக்கிறார்? என்று சொல்வதற்கெல்லாம் ஒன்றுமில்லை.இரண்டு மூன்று ஸ்கில் தெரியும்.அதை வைத்துதான் பேசுகிறேன்.
அரசியல் பக்கம் செல்ல எங்கள் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை.ஒரே ஒருவர் தான் அதை பல காலமாக சொல்லி பேசிக் கொண்டிருப்பார்.அதை நாங்கள் பேச்சை மாற்ற உதாசினப் படுத்திக் கொண்டிருப்போம்.தற்போது அவரது ஆசையும் நிறைவேறியுள்ளது.
நீங்கள் எல்லாம் சுதந்திர போராட்டம் செய்ய வேண்டியிருந்தது. நாட்டிற்கே தேவையாக இருந்தது. அதனால் செய்தீர்கள். நான் ஏன் அரசியலுக்கு போக வேண்டும் என்றேன்.அப்படி ஒரு போராட்டம் மறுபடியும் வந்தால் என கேட்டார்.கிட்டத்தட்ட தற்போது அந்தநிலை வந்துள்ளது.அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை.
இங்கு அமைக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி பரமக்குடி மக்களுக்காக எங்கள்குடும்பத்தின் சார்பில் நாங்கள் தரும் அன்பு பரிசு. கூலி வேலை செய்து கஷ்டப் பட்டு படித்து வேலை இல்லாத நிலை நம் நாட்டில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 61 லட்சம் மாணவர்கள் ஆரம்ப பள்ளிக்கு செல்கின்றனர். நடுநிலைக்கு வரும்பொழுது 58 லட்சமாக குறைகிறது.எஸ்.எஸ்.எல்.சி.க்கு வரும்போது 11 லட்சமாக குறைகிறது. டிகிரிக்கு வரும்போது 3 லட்சம் பேர் தான் போகிறார்கள்.மீதமுள்ள இளைஞர்களின் நிலை என்ன? அந்த கமலஹாசன்களின் நிலை என்ன? அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்ன?துப்புரவு பணிக்கு பி.கெச்.டி.படித்தவர்கள் விண்ணப்பிக்கும் அவலநிலை இங்கு வந்துள்ளது.
அதற்கு காரணம் நமது திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை.வேலை வாய்ப்புக்காக இடம் பெயர்ந்து செல்லக்கூடாது என்பதுதான் எங்களது ஆசை.அதற்காகத் தான் இதை செய்கிறோம்.இது ஒரு திறமை வளர்ப்பு பஞ்சாயத்தாக ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசை.இங்கிருந்தே பல தொழில்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலை உருவாக வேண்டும்.நான் பணக்கார வீட்டு பையன் திமிருக்காக விளையாடி பார்க்கிறேன் என நினைப்பார்கள். நான் சலூனில் ஒன்றரை மாதம் வேலை செய்துள்ளேன். பின்பு அங்கிருந்த ஓனர் போட்டு கொடுத்து விட்டார்.அங்கு கிடைத்த பாடம் தான் எனக்கு பிற தொழில்களுக்கு பாடமாக இருந்தது.அப்படி இல்லையென்றால் நான் எடிட்டிங்பற்றியோ,கேமராவை பற்றியோ நினைத்திருக்க மாட்டேன்.எந்த தொழிலும் நமக்கு கீழானது இல்லை என்பதை உணர்ந்தால் வாழ்க்கை தரமும் உயரும்.
ஒரே இன்சீனியராக,வக்கீல்களாக இல்லாமல் ஒரு ஊரில் ஓரே தென்னை மரங்களாக இல்லாமல் வெவ்வேறு பயிர்களாக இருந்தால் செழிப்பான நாடு என தோன்றும்.அதைப்போல் இங்குள்ளவர்கள் திறமையான தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் தொழில் விற்பனர்களாகி வேலை வாய்ப்பை அளிக்கும் முதலாளிகளாக மாற வேண்டும்.
சத்தியாகிரக போராட்டத்திற்கு பிறகு இந்தியா திறமை வளர்ப்பு போராட்டத்தில் தமிழகம் இன்னும் முழுமையாக இறங்காமல் உள்ளது என்பது கண்கூடாக தெரியும் உண்மை.மற்ற மாநிலங்களில் இந்த நிலை செயல் வடிவத்திற்கு வந்து நடந்து கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்புக்களை உருவாக்க பல்கலை கழகங்கள் மட்டும் இருந்தால் போதாது.பட்டாளத்திற்குசென்று இறப்பவர்களின் எண்ணிக்கையை விட சாலை விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.எந்த வேலை கிடைக்கிறதோ அதை வைத்து முன்னேற வேண்டும்.இலவசத்தை கொடுத்தால் வாங்குங்கள்.ஆனால் அது 3 மாதங்கள்தான் இருக்கும்.அதுகோளாறு ஆகிவிட்டால் அதை சரிசெய்ய எங்கள் மய்யத்தில் இருந்து தான் வரவேண்டும். நாங்கள் தருவது வாழ்நாள் முழுவதும் தங்கும்.5 வயதில் பரமக்குடியில் எனது அண்ணி பிறந்த நாள் கொண்டாடினார்.அப்போது எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.சினிமாவிற்கு வந்தபோதும் பிறந்தநாள் கொண்டாடியதும் சந்தோஷம் இல்லை.ஆனால் தற்போது கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.இது பல வாழ்க்கைக்கு ஆரம்பம்.அதை வெற்றி பெறச் செய்வது நமது கடமையாகும் இவ்வாறு பேசினார். ராமநாதபுரம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.