எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,- மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவை இணைக்கு வகையில் பாம்பன் கடலில் இரு வழியில் ரயில் செல்லும் பாதை கொண்ட புதிய ரயில்பாலமும்,கப்பல்கள்,விசைப்படகுகள் கடந்து செல்வதற்கு அதி நவீன தெழில்நுட்பத்துடன்கூடிய தூக்குப்பாலம் அமைப்பதற்கு கட்டும் பணிகள் துவங்க நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
. உலக புகழ்பெற்ற புனித ஸ்தலமாகவும் சுற்றுலா தலமாகவும் ராமேசுவரம் விளங்கி வருகிறது.இந்த ஸ்தலமானது உலக நாடுகளில் முக்கியம் வாய்ந்தவையாகும்.புனித ஸ்தலமான ராமேசுவரம் நான்கு பக்கமும் கடல் நீரால் சூழ்ந்து தீவுப்பகுதியாக அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியை உலக நாடுகளில் பல பகுதிகளுடன் இணைக்கும் வகையில் ராமேசுவரம் பகுதியிலிருந்து 15 கி.மீ தொலை தூரத்தில் அமைந்துள்ள பாம்பன் பகுதியில் பாக்ஜலசந்தி கடல் மேல் கடந்த 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ரயில் பாலம் அமைத்தனர்.இந்த பாலத்தில் மீட்டர்கேச் ரயில் பாதையாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பிராட்கேஜ் ரயில் பாதையாக மாற்றம் செய்து தற்போது பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.அதுபோல மன்னார் வளைகுடா கடல் பகுதியையும்,பாஜ்சலசந்தி கடல் பகுதியை இணைக்கு வகையில் இரு புறமும் இருந்து இந்த கடல் வழியாக கப்பல்கள் கடந்து செல்வதற்காக பாலத்தின் இடையே திறந்து மூடும் வகையிலான ஹெர்ஷர் பாலம் என்ற தூக்குபாலம் அமைக்கபப்ட்டுள்ளது. இந்த தூக்கும் பாலம் 105 ஆண்டுகளை கடந்த இந்தப் பாலம் கடலில் வீசும் உப்புக் காற்றால் அரிப்பு தன்மை ஏற்பட்டு சமீப காலமாகப் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. இதனால் இந்த தூக்கு பாலத்தை திறந்து மூடுவதில் ரயில்வே துறைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.இதனால் இவ்வழியாக வணிக ரீதியாக செல்லும் கப்பல்கள்,சிறிய பயணிகள் கப்பல்கள் செல்ல முடியாமல் இலங்கை வழியாக சுற்றி செல்கிறது.இதனால் செலவீண தொகை அதிகமாக ஏற்பட்டு வருகிறது.மேலும் இந்த ரயில் பாலம் 100 ஆண்டுகளை கடந்ததால் பாலத்தின் தன்மையும்.வலுவும் குறைந்து வருகிறது.இதை ரயில்வே துறை பொறியாளர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.இதனை தொடர்ந்து ரயில்வே துறை நிர்வாகம் இந்த பாலத்தின் தன்மை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.அதன் பேரில் ராமேசுவரத்தின் முக்கியத்துவம் மற்றும் தன்மையறிந்து மத்திய அரசு பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்து அதற்கு முதல் கட்டமாக ரூ.246 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.இந்த பணிகள் தொடங்குவதற்கு பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கன்னியாகுமாரியில் நடைபெற்ற ஒரு விழாவில் அடிக்கல் நாட்டினார்.இதனையடுத்து கடலில் பவளப் பாறைகளுக்குப் பாதிப்பின்றி புதிய ரயில் பாலம் அமைக்க பணிகள் தொடங்க ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் இறுதியாத பணிகள் தொடங்க நேற்று மண்டபம் பகுதியிலிருந்து ரயில் பாலம் தொடங்கு பகுதியில் பணிகள் துவங்க தனியார் பாலம் கட்டும் நிறுவனம் சார்பில் பூமி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் அகமதாபாத் பகுதியை சேரந்த தனியார் நிறுவனமான ரஞ்சித் பில்டர்ஸ் நிறுவனத்தின் திட்ட அதிகாரி முகேஷ்பட்டேல் தலைமை வகித்து 9.28 மணிக்கு பூஜை தொடங்கி வைத்தார்.பின்னர் அப்பகுதியில் இயந்திரம் மூலம் மணல் பரிசோதணை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ரயில்வே கட்டுமான நிறுவனத்தின் சென்னை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, புதிய பாலத்திற்கான தொழில்நுட்ப அலுவலர்கள் அன்பழகன், ராஜேந்திரன், பாலப் பணிகளை மேற்கொள்ள உள்ள அப்துல்சமத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூன்று வகையாக திறக்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தூக்குபாலம்:
மண்டபம் பகுதியிலிருந்து ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2 கி.மீ தொலைதூரத்திற்கு கடலின் இடையே 60 அடி நீளத்திலும்,12 மீட்டர் அகலத்தில் இரண்டு வழியில் ரயில் செல்லும் வகையாகவும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் வரிசையாக மூன்று தூண்கள் அமைத்து 99 இடங்களில் 99 தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த தூண்களில் இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட்டு அதற்கு மேல் இரும்பு கட்டைகள்,தண்டவாளங்கள் அமைக்க உள்ளன. தற்போதைய உள்ள ரயில் பாலத்திலிருந்து துவக்கத்தில் 30 மீட்டர் தூரத்திலும், நடுவில் 50 மீட்டர் வரையிலான தூரத்திலும்,முடிவில் 30 மீட்டர் தூரத்திலும் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. தற்போது உள்ள தூக்குப் பாலத்திற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய தூக்குப் பாலமும் இதில் அமைகிறது. இதில் கப்பல்கள்,பெரிய மீன்பிடி விசைப்படுகள் இழுகுவாக கடந்து செல்லும் அளவிற்கு சுமார் 22 மீட்டர் உயரத்துடன் அமைக்கபடவுள்ளன. இந்தத் தூக்குப் பாலம் மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் மற்றும் மனித சக்தி என 3 வகையாக திறக்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு அமைக்கபடவுள்ளது.கடலின் அடியில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப தூண்களின் ஆழம் தேவையான அளவில் அதிகரிக்கப்படும் எனவும்,மேலும் பாம்பன் கடலில் தொடங்கப்பட உள்ள இந்தப் புதிய பாலத்தின் பணிகளில் 200 முதல் 600 தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும், நிர்ணயம் செய்யப்பட்ட 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் எனவும் பாலப் பணிகள் மேற்பார்வையாளர் அப்துல்சமது தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.