முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெதர்லாந்து ராணி பாகிஸ்தான் வருகை

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : நெதர்லாந்தின் ராணி மேக்சிமா நவம்பர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நெதர்லாந்து ராணி மேக்சிமா பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளரின் சிறப்பு வழக்கறிஞராக அவர் வருகை தரவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், ‘நவம்பர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராணி மேக்சிமா, பாகிஸ்தான்  அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் சாக்ரமெண்டோ, இம்ரான் கான் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவார். நாட்டின் உள்ளடக்கிய நிதி மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்த உள்ள அவர், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன தலைவர்களையும் சந்தித்து பேசுவார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு ராணி மேக்சிமா கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து