எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கும் எதிரிகளின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும். அதில் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்ட துவக்கி விழாவில் பேசினார்.
புதிய மாவட்டம் உதயம்
தென்காசி புதிய மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார். தென்காசி மக்களின் 33 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி நேற்று உதயமானது. இந்த புதிய மாவட்டத்தையும் அதன் நிர்வாக பணிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முறைப்படி தொடங்கி வைத்தார். விழாவிற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச்செயலாளர் சண்முகம் வரவேற்புரை வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார். பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மேலாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ. 12.16 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, பள்ளி கல்வித் துறை, சுற்றுலா மற்றும் தமிழ்நாடு மின்சாரத் துறை சார்பில் ரூ. 28.67 கோடி மதிப்பில் முடிவுற்ற 45 புதிய திட்டப் பணிகளையும் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.
முதல்வர் பேச்சு
அப்போது பேசிய அவர், இயற்கை எழில் கொஞ்சும் தென்பொதிகை மலை பகுதியில் அமைந்துள்ள தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றி வைத்துள்ளேன். 2916.11 ச.கி.மீ பரப்பளவு கொண்டுள்ள இந்த மாவட்டம் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களுடன், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம், வி.கே. புதூர், சிவகிரி, திருவேங்கடம் போன்ற 8 வருவாய் வட்டங்களுடன், 5 சட்டசபை தொகுதிகள் இந்த புதிய மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர், செங்கோட்டை ஆகிய 6 நகராட்சிகளும், 9 பேரூராட்சிகளும், 7 ஊராட்சி ஒன்றியங்களும் தென்காசி மாவட்டத்தில் உள்ளது. இப்பகுதி ஆன்மீக மற்றும் சுற்றுலாதலங்களுக்கு பெயர்பெற்றது. தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில், குற்றாலநாதர் கோயில், திருமலை முருகன் கோயில், இலஞ்சி குமரன்கோயில், இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம், புளியரை தட்சிணாமூர்த்தி ஆலயம் என இப்பகுதி திருத்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. சுதந்திரபோராட்ட வீரர் வாஞ்சிநாதன், பூலித்தேவன், ஒண்டிவீரன் பிறந்த மண் இந்த மாவட்டம். ராமநதி, கடனாநதி, குற்றால நீர்வீழ்ச்சி, சிற்றாறு என தண்ணீர் செழிப்பான மாவட்டமாக தென்காசி திகழ்கிறது. அம்மாவின் அருளாசியுடன் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்கான நலத்திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதில் அதிக அக்கரையுடன் செயல்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. குடிமராமத்து பணியில் தமிழகத்தில் உள்ள குளம், குட்டைகள், ஏரிகள், வாய்க்கால்கள் அனைத்தும் தூர் வாரப்பட்டு மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயம் பெருகும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடியில் இருந்து தென்காசி வரும் சாலை நெடுகிலும் உள்ள குளங்களில் தண்ணீர் பெருகி இருப்பதை நான் நேரில் பார்த்து மகிழ்ந்தேன். தொடர்ந்து விடுபட்டுபோன கிராமங்களில் உள்ள ஊரணி, குட்டை, குளங்கள் அனைத்தையும் தூர் வாரி அதிலும் மழைநீரை சேமிக்க அம்மாவின் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். 8 ஆண்டுகால ஆட்சியில் வேளாண்மை துறையில் 100 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து அரசு சாதனை புரிந்துள்ளது. உயர்கல்வித்துறையில் அம்மாவின் ஆட்சியில் 65 கல்லூரிகள் திறக்கப்பட்டன. தற்போது 12 அரசு கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பாலிடெக்னிக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு மாணவர்களின் கல்வியில் ஒளியேற்றப்பட்டுள்ளது. உயர்கல்வியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மேலும் உலக முதலீட்டார்கள் மாநாட்டை 2-வது முறையாக நடத்தி அதன் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 10.54 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி அ.தி.மு.க. ஆட்சி சாதனை புரிந்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதை உதாரணமாக கொண்டு இன்று நாடு முழுவதும் உள்ள மாநிலங்களும் பின்பற்றி வருவது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு வரை சொத்து வைத்திருந்தாலும் முதியவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் எனும் அறிவிப்பு, வீட்டுப்பட்டா, பட்டா மாறுதல்களில் துரிதமான பணிகள், மருத்துவத்துறையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது, 6 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தந்தது, தாலிக்கு தங்கம், ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கியது என மக்களின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து உடனடி முடிவு எடுத்து திட்டங்களை துரிதமாக செயல்படுத்துவதில் அரசு விரைந்து செயல்படுகிறது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால் எளிதாக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும். மக்களிடமும் எளிதாக அத்திட்டங்கள் சென்றடையும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மாவட்ட பிரிப்புக்கும், தேர்தலுக்கும் சம்பந்தமில்லை
தமிழத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போட முயற்சி செய்கிறார்கள். எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். எதிரிகளின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. என்ன நடந்தாலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும். நடந்து முடிந்த இடைத்தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்றும் முதல்வர் தெரிவித்தார். விழா நிறைவில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, செல்லூர் ராஜு, வேலுமணி, கடம்பூர் ராஜு, கே.டி. ரஜேந்திர பாலாஜி, அன்பழகன், சரோஜா, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், பாண்டியராஜன், நிலோபர் கபில், எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வமோகன் தாஸ்பாண்டியன், மனோகரன், நாராயணன், முருகையா பாண்டியன், முகம்மது அபுபக்கர், இன்பத்துரை, மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, கே.ஆர்.பி. பிரபாகரன், அரசுத் துறை அதிகாரிகள், அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் இராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: