முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 24 தீவிரவாதிகள் மற்றும் 2 வீரர்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் 24 தீவிரவாதிகள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் தர்சாப் மாவட்டத்தில் தீவிராவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆப்கான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஆப்கான் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பொது மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் பலியான தீவிரவாதிகளில் 8 பேர் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படிருப்பதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது குறித்து தலிபான் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து