எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி,பேரையூர் பகுதி வாகனங்களுக்கும் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை வாகனங்களுக்கும் வழக்கம் போல் இலவச அனுமதி தொடர்ந்து வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் நான்கு வழிச்சாலை டோல்கேட் செயல்பட்டு வருகிறது.திருமங்கலம் நகராட்சி எல்லைக்கு மிகவும் அருகில் அமைக்கப்பட்ட இந்த டோல்கேட்டினால் திருமங்கலம் நகர் மற்றும் டி.கல்லுப்பட்டி,பேரையூர் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து அப்போது தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக திருமங்கலம் நகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்.208 வழியில் உள்ள டி.கல்லுப்பட்டி,பேரையூர் பகுதி வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் சார்பில் இலவச அனுமதி அனுமதி வழங்கப்பட்டது.இந்த நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கப்பலூரை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வரும் நிர்வாகம் திருமங்கலம் நகரில் வசிப்பவர்களுக்கு மட்டும் இலவச அனுமதி வழங்கியதுடன் டி.கல்லுப்பட்டி பேரையூர் பகுதி வாகனங்களுக்கு வடமாநில ஆட்களை வைத்து மிரட்டி கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது.அதே போல் 300மீட்டர் தொலைவில் உள்ள கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயக்கப்படும் வாகனங்களுக்கும் வடமாநிலத்தவரை வைத்து அதிரடி மிரட்டல்களுடன் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே டோல்கேட்டில் உள்ள 10 நுழைவுகளில் 8நுழைவுகள் தற்போதைய பாஸ்டேக் முறைக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதனால் 1 மற்றும் 10ம் நுழைவு வழிகள் பணம் கட்டி பயணிக்கும் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.மேலும் டூவீலர்கள் சென்றிடும் பாதையை 0 மற்றும் 11ம் பாதை என உருவாக்கி அரசுப் பேருந்துகள் மற்றும் ஆம்புலன்சுகள் செல்லும் பாதையாக தற்போது மாற்றப் பட்டுள்ளது.இதன் காரணமாக திருமங்கலம் நகர்,டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்கள் மற்றும் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை நிர்வாகத்தினர் தாங்கள் கப்பலூர் டோல்கேட்டினால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்,வடமாநில பணியாளர்களால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாவதாகவும்,இந்த நிலையை மாற்றி வழக்கம் போல் கப்பலூர் டோல்கேட்டில் தங்களது வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்கிட வேண்டுமாறு கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.கே.வேம்புவேந்தன் சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நா.முருகேசனிடம் புகார் மனுஅளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி,காவல் ஆய்வாளர் ராஜாமணி,டோல்கேட் மேலாளர்,தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர், சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.கே.வேம்புவேந்தன்,கப்பலூர் தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா,ஒருங்கிணைப்பாளர்கள் அருண்,ஆம்ஸ்டிராங்,வாகன உரிமையாளர்கள் சரக்கு மற்றும் வாடகை வாகன ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் தினகரன்,ராஜா,குமார்,திருமங்கலம் வியாபாரிகள் சங்கத் தலைவர் மணிசேகர்,திருமங்கலம் வர்த்தகர் சங்க தலைவர் விஜயராஜன், வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி,முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.கே.குருசாமி,முன்னாள் கவுன்சிலர் பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,பஸ் உரிமையாளர் சங்க துணைத்தலைவர் ஸ்ரீதர்,தி.மு.க நகர பொறுப்பாளர் முருகன்,ம.தி.மு.க நிர்வாகிகள் அனிதாபால்ராஜ்,திருப்பதி,கம்யூனிஸ்ட் சுப்புக்காளை,முத்துராமன்,சந்தானம்,வழக்கறிஞர் இருளப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு காரசார விவாதங்களுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில் முன்பிருந்த நிலையின்படி திருமங்கலம் நகர்,டி.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பகுதி வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி கப்பலூர் டோல்கேட்டில் 0 மற்றும் 11ம் பாதை வழியாக வழக்கம் போல் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.அதே போல் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதி வாகனங்கள் பற்றிய முழு விபரங்களை தயார் செய்து கொடுத்து முறையான அனுமதியுடன் 0 மற்றும் 11ம் பாதை வழியாக டோல்கேட்டில் இலவச பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.அதே சமயம் டோல்கேட்டில் பணியிலிருக்கும் வடமாநில ஊழியர்கள் குறித்த விபரங்களை காவல்துறையினரிடம் வழங்குவதுடன் அவர்கள் அடையாள அட்;டை அணிந்து பணியாற்றிடவும் ஆலோசனை வழங்கப்பட்டது.இவற்றினை மீறி தகராறு செய்பவர்கள் மீது காவல்துறை உதவியுடன் கடும் நடவடிக்கை எடுத்திடவும் முடிவு செய்யப்பட்டது. திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த முத்தரப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தங்களுக்கு திருப்தியளிப்பதாக தெரிவித்த சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர்,இதனை மீறி கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் செயல்பட்டால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அமல் படுத்தி சுங்கச்சாடியை இடமாற்றம் செய்திட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.