முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் : பிறந்த குழந்தை உள்பட 8 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதலில் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய பெண், பிறந்த குழந்தை உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.  

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், கோஸ்ட் மாகாணத்தில் வான்வழி தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறும்பொழுது, சமீபத்தில் பிரசவம் முடிந்து மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். இந்த தாக்குதலில் அந்த பெண், பிறந்த குழந்தை மற்றும் பெண்ணின் மற்றொரு குழந்தை, குழந்தையின் தந்தை மற்றும் ஒரு கிராமவாசி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என கூறினார்.

இதனை கவர்னருக்கான செய்தி தொடர்பு அதிகாரி தலேப் மங்கள் உறுதிப்படுத்தி உள்ளார். வான்வழி தாக்குதலில் கார் ஒன்று இலக்காகி உள்ளது. எனினும், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து