முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ. ஒரு லட்சம் கோடியை எட்டியது - நிதித்துறை அமைச்சகம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நவம்பரில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ. ஒரு லட்சம் கோடியை எட்டியது என்று நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தெடர்பாக நேற்று நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு நவம்பர் மாதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ. ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளது.  நவம்பர் மாதத்தில் மொத்தமாக ரூ.1,03,492 கோடி ஜி.எஸ்.டி. வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது. வரி வசூலில் இது 6 சதவீதம் அதிகரிப்பாகும். அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ. 95, 380 கோடியாக இருந்தது. இதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  வசூலானது ரூ. 97, 637 கோடியாக இருந்துள்ளது.      மொத்த வசூலான ரூ.1,03,492 கோடியில் ரூ. 19, 592 கோடி மத்திய ஜி.எஸ்.டி. வரியாகவும், ரூ. 27, 144 கோடி மாநில ஜி.எஸ்.டி. வரியாகவும், ஒருங்கிணனைந்த ஜி.எஸ்.டி. வரியாக ரூ. 49, 028 கோடியும் வசூலாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து