எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மழை வெள்ள அபாயம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது மழை வெள்ளத்தை சந்திக்க அனைத்து நிலைகளிலும் தயாராக இருக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
4, 399 பாதிப்பு பகுதிகள் கண்டுபிடிப்பு
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த 29-ம் தேதி வெளியிட்ட வானிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது அறிவுரை வழங்கி, தகுந்த உத்தரவுகளை வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 23-ம் தேதி மற்றும் அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வடகிழக்கு பருவ மழை தொடர்பாக எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தமாக அனைத்து துறைகளின் உயர் அலுவலர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கினார். கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும், நேரடியாக ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் எற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தவிர, செப்டம்பர் 24 மற்றும் அக்டோபர் 4 ஆகிய இரு தினங்களில் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்களும் நடைபெற்றன. வடகிழக்குப் பருவ மழையினால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 4,399 பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 639 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9,162 பெண்கள் அடங்கிய 21,597 எண்ணிக்கையிலான முதல்நிலை மீட்பாளர்களும், கால்நடைகளை பாதுகாக்க 8,871 முதல்நிலை மீட்பாளர்களும், மழை காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் 9,909 முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தயார்நிலையில் தமிழக அரசு
பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளாக, 17,866 தடுப்பணைகள் கட்டப்பட்டு, 14,946 கசிவு நீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 9,250 நீர் செறிவூட்டும் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாத 11,080 ஆழ்துளைக் கிணறுகளும், 3,434 திறந்தவெளி கிணறுகளும், நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. 3,174 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆற்றுப்படுகைகள் தூர்வாரப்பட்டன. 3,662 ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 8,749 பாலங்கள் மற்றும் 1,40,228 சிறுபாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், முடிவு பெறாத பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களைத் தவிர, 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2,394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2,897 ஜே.சி.பி இயந்திரங்கள், 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 ராட்சத பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தால், ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பயிற்சியளிக்கப்பட்ட மீட்பாளர்கள்
நடமாடும் முதல்நிலை மீட்பாளர் குழு ஒவ்வொரு பகுதி / வட்டம் / மண்டல வாரியாக அமைக்கப்பட்டு, அக்குழுக்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை தவிர, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 4,155 காவலர்கள் (சென்னை நீங்கலாக) அனைத்து கடலோர மாவட்டங்களிலும், 1,844 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தில் 607 காவலர்களும் ஆக மொத்தம் 6,606 பயிற்சி பெற்ற காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,537 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 1,400 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,000 நபர்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க, மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் (1070), மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் (1077), tnsmart செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவுரை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பருவமழை காலத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் விரைவில் சென்றடைய ஏதுவாக, தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் மற்றும் தேவையான மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.
மேலும், தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில், போதிய ஜெனரேட்டர் வசதிகளையும் ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.பேரிடர் காலங்களில் பற்றாக்குறையினை தவிர்க்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஒருங்கிணைக்க வேண்டும்
கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய கலெக்டர்கள் நிலையிலான அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் / பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை காலத்தில் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து அரசுத் துறையினைச் சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நீர்தேக்கங்களும் கண்காணிக்கப்பட்டு வர வேண்டும். மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட இடங்களில் மழைநீர் துரிதமாக வெளியேற்ற வேண்டும். ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை மேடான இடங்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வலியுறுத்தினர்.
மழையால் உயிரிழப்பு
போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள இடங்களில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தினை சீரமைக்கவும், உயர் மட்டப் பாலங்கள் தேவைப்படும் இடங்களுக்கு நீண்ட கால பேரிடர் தணிப்பு நடவடிக்கையாக உரிய முன்மொழிவுகளை உடனடியாக அனுப்பவும் முதல்வர் உத்தரவிட்டார். சூறாவளி, வெள்ளம், இடி மற்றும் மின்னல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டு, இந்தக் குறும்படங்களை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் திரையரங்குகள் மற்றும் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பவும் உத்தரவிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்டத்தில், 1-ம் தேதி பெய்த கன மழையின் காரணமாக, சிக்க தாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததினால், ஒரு தொகுப்பு வீடு மற்றும் மூன்று வில்லை வீடுகள் முற்றிலும் சேதமுற்றன. மீட்புப் பணியில், வருவாய்த் துறையினர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினைச் சார்ந்த வீரர்கள் ஈடுபட்டனர். இந்த வீடுகளில் குடியிருந்த, 10 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள் (1 பெண் + 1 ஆண்) உள்பட மொத்தம் 15 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
தலா ரூ.4 லட்சம் நிதியுதவி
மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளுக்காக சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4. லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். மேற்கூறிய 15 நபர்கள் தவிர, மேலும் 2 நபர்கள் இந்த சம்பவத்தில் தற்போது இறந்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
மழையால் பலியானோர்க்கு நிதி
தமிழகத்தில் 29, 30, மற்றும் டிசம்பர் 1-ம் தேதிகளில் பரவலாக பெய்த கன மழையின் காரணமாக, பல்வேறு நிகழ்வுகளில் 8 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 8 நபர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், 58 கால்நடை இழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 1305 குடிசை வீடுகளும், 465 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. மேற்கூறிய இனங்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார். கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இடுபொருள் மானியம் வழங்கவும், காப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தரவும், காப்பீட்டுக் காலத்தை நீட்டிப்பு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்கள். கடலூர் மாவட்டத்தில் 805 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 38 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 73 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், வருவாய்த் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் நிர்வாக ஆணையர் / முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) தீரஜ் குமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.