முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் தொடர்ந்து கனமழை: 5 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

 திருமலை : திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 5 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்  திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும், உள்ளூர் மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களும், விழா நாட்களில் ஒரு லட்சம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகள், வியாபார நிறுவனங்களில் அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. திருமலையில் ஒட்டுமொத்த பயன்பாட்டுக்கு தினமும் 32 லட்சத்தில் இருந்து 35 லட்சம் கேலன் வரை தண்ணீர் செலவாகிறது.

அந்த தண்ணீர் திருமலையில் உள்ள குமாரதாரா, பசுபுதாரா, ஆகாச கங்கை, பாபவிநாசனம், கோகர்ப்பம் ஆகிய 5 அணைகளில் இருந்தும், திருப்பதி அருகில் உள்ள கல்யாணி அணையில் இருந்தும் வினியோகம் செய்யப்படுகிறது. திருமலையில் உள்ள 5 அணைகளில் இருக்கும் தண்ணீர் இருப்பு நிலவரம் பற்றி கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி கணக்கெடுத்த போது, அன்றைய நாளில் இருந்து 102 நாட்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு இருப்பதாக கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருமலையில் சமீப காலமாக விட்டு விட்டு மழை பெய்ததால், 5 அணைகளில் ஓரளவுக்கு நீர் நிரம்பியது. செப்டம்பர் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம்  வரை பெய்த மழையால், மேலும் 144 நாட்களின் பயன்பாட்டுக்கு தண்ணீர் போதுமானதாக இருந்தது.

தற்போது திருமலையில் இரவு பகலாக 5 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் திருமலையில் பல்வேறு இடங்களில் திடீரென நீருற்றுகளும், காட்டாறுகளும் உருவாகி உள்ளது. அவைகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் 5 அணைகளுக்கு வந்து சேருகிறது. இதனால் 5 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது .இதனால் திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும், உள்ளூர் மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து