முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 பேர் மனுத்தாக்கல்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பாபர் மசூதி நில வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத் - எ - உலமா இந்த் ஆதரவு மற்றும் மனுதாரர்கள் சிலரும் முடிவெடுத்துள்ளனர். எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன.

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஜமாயத் உலமா அமைப்பு சார்பில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மவுலானா ஹஸ்புல்லா, முகமது உமர், மவுலானா மகபசூர் ரஹ்மான், மிஷ்பாஹுதீன் ஆகிய 4 பேரும் தனித்தனியாக மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து