முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளராகிறார் கவுதம் காம்பிர்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் 10 சதவீத பங்குகளை முன்னாள் வீரரும், எம்.பி.யும் ஆன கவுதம் காம்பிர் வாங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அரசியலில் களம் இறங்கினார்.

டெல்லியில் பா.ஜ.க. சார்பில் போட்டியில் எம்.பி. ஆனார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளராக ஜி.எம்.ஆர். குரூப், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய குரூப்புகள் உள்ளன. இரண்டும் தலா 50 சதவீதம் பங்குகள் வைத்துள்ளன.

கடந்த ஆண்டு ஜி.எம்.ஆர். குரூப் 50 சதவீத குரூப்பை 500 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இந்நிலையில்தான் ஜி.எம்.ஆர். குரூப்பிடம் இருந்து 10 சதவீத பங்குகளை காம்பிர் வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்க இருக்கும் காம்பிர், அனுமதிக்காக காத்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து