முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு நலனுக்காக குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாட்டுக்கு உகந்த வகையிலும், நலனுக்காகவும் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம்(ஐ.பி.சி), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(சி.ஆர்.பி.சி.) ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படத் தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளதும், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதிலும் பல்வேறு தரப்பிலும் விவாதங்களையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் குற்றவியல் நடைமுறை சட்ட திருத்தம் குறித்து அமித்ஷா தெரிவித்துள்ளார்.

விரைவாக நீதி வழங்கவும், நவீன ஜனநாயகத்துக்கு ஏற்றார்போல் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்து அனைத்து மாநிலங்களும் தங்கள் ஆலோசனைகளை அனுப்பவும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி, ஐ.ஜி. ஆகியோரின் 54-வது 3-நாள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் , உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

நாட்டின் நலனுக்காகவும், உகந்த வகையிலும் சி.ஆர்.பி.சி., ஐ.பி.சி.யில் இப்போதுள்ள ஜனநாயகத்துக்கு உரியவகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.அனைத்து இந்திய போலீஸ் பல்கலைக்கழகம், அனைத்து இந்திய தடயவியல் அறிவியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றை மாநிலங்களில் கொண்டு வர உள்ளோம் எனத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் போலீசாரின் செயல்கள், மாநில அளவில் போலீசாரின் செயல்பாடுகள் குறித்துப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. எல்லைப் புறப்பாதுகாப்பு, போதைமருந்து தடுப்பு, தீவிரவாதத் தடுப்பு, தடயவியல் துறையை மேம்படுத்துதல், டிஜிட்டல் குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் உள்ள அபீர்தீன் போலீஸ் நிலையம், குஜராத்தில் உள்ள பலாஸினோர், மத்தியப்பிரதேசத்தில் உள்ள புர்ஹான்புர் போலீஸ் நிலையங்கள் ஆகியவற்றுக்கு சிறந்த விருது வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து