முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் மலைமேல் கைலாசநாதர் திருக்கோவிலில் மஹா கார்த்திகை திருவிழா

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டம், பெரியகுளம் மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் மகா தீப திருநாளை முன்னிட்டு திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் மஹா தீபம் ஏற்றினார்.
 இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மகா தீப திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு இத்தீப திருநாளை முன்னிட்டு காலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹ வாசனம், பூர்வாங்க பூஜைகள், ரிஷபயாகம் நடைபெற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் கொடி பட்டத்துடன் கோவில் வலம் வந்து ரிஷப கொடியேற்றம் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது. இக்கொடியேற்றத்தில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் மனைவி ஆனந்தி,  வழக்கறிஞர் சந்திரசேகரன், சண்முகசுந்தரம், அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு செயலாளர் சிவக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 மாலை 6 மணிக்கு பால தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கார்த்திகை மஹா தீபத்தை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் ஏற்றி வைத்தார். பின்னர் கைலாசநாத சுவாமிக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு  மஹா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில்  ஸ்ரீகுருதட்ஷிணாமூர்த்தி சேவா சங்க கௌரவ ஆலோசகர் சி.சரவணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். இவ்விழாவில்;, முன்னாள் பெரியகுளம் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் மனைவி ஆனந்தி,  டாக்டர் முத்துகுகன்,  மற்றும் கழக நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவினை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி தலைமையில் காவல் துறையினர் சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து