முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் ராமநாதபுரத்தில் மனித உரிமைகள் உறுதிமொழி

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ஒவ்வொரு மனிதனும் சக மனிதரிடத்தில் வேற்றுமை கருதாமல் அவர்தம் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என்ற எண்ணத்தினை வலியுறுத்திடும் விதமாக ஆண்டுதோறும்   டிசம்பர் 10-ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ்  தலைமையில், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜி.கோபு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து