முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரு பெயர் வைக்காததற்கு ராகுல் தனது பாட்டிக்கு நன்றி கூற வேண்டும் : சாவர்க்கர் பேரன் பதிலடி

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி :  மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேசியதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், சாவர்க்கர் பேரன் ரஞ்சித் கூறுகையில்,

குடும்ப பெயரில், நேரு பெயரை சேர்க்காமல், காந்தி பெயரை சேர்த்ததற்காக ராகுல், அவரது பாட்டிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடந்த இந்தியாவை காப்போம் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசும் போது, பார்லிமென்டில் உண்மையை பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் காந்தி.  ராகுல் சாவர்க்கர் இல்லை . மோடி தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார்.

இது தொடர்பாக சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறியதாவது:-
ராகுல் பேசியிருப்பது நல்லதல்ல. அவர், சாவர்க்கர் இல்லை என்பது நல்ல விஷயம். இல்லையென்றால், நாம், அவமானத்தில் நமது முகத்தை மூடி செல்ல வேண்டும். அவரது பாட்டி, இந்திரா, தனது பெயரில் இருந்து நேரு என்பதை அகற்றி விட்டு, காந்தி என்பதை சேர்த்ததற்காக அவருக்கு ராகுல் நன்றி தெரிவிக்க வேண்டும்.

ராகுல், சுதந்திர போராட்ட வீரரை அவமானப்படுத்தியுள்ளார். இதுபோன்ற மோசமான கருத்துகளை சொல்வது ராகுலுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் மீது அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன். சாவர்க்கரை அவமதிக்கும் விதமாக யாரும் பேசக் கூடாது, ராகுல் மீது அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து