முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் உரையுடன் ஜனவரியில் தமிழக சட்டசபை கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்குகிறது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 20-ம் தேதி வரை நடைபெற்றது. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு சட்ட மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன. 6 மாதத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பதால் அடுத்த மாதம் (ஜனவரி) 19-ம் தேதிக்குள் சட்ட சபையை கூட்ட வேண்டும். அந்த வகையில் பொங்கலுக்கு முன்பாக சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதியுடன் முடிந்து புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் ஜனவரி 6-ம் தேதிக்குள் நடைபெறும். அதன்பிறகு சட்டசபையை கூட்டி 12-ம் தேதிக்குள் சபை கூட்டத் தொடரை முடிக்க ஏற்பாடு நடந்து வருவதாக சட்டபேரவை செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
2020-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் தொடங்க உள்ளது.

கவர்னர் உரை நிகழ்ச்சியதும் அதற்கு மறுநாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2-ம் தேதி தெரிந்து விடும் என்பதால் சட்டசபையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து