முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலில் பேட்டிங் செய்தால் பயம் இருக்கக்கூடாது: ரத்தோர்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : முதலில் பேட்டிங் செய்தால் பயம் இருக்கக்கூடாது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ரிஷப் பந்த் குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதிப்பதற்கு காரணம் அவரிடம் அபரிமிதமான திறமைகள் இருப்பதுதான். குறிப்பிடத்தக்க தரம் மற்றும் வெற்றியை தேடிக் கொடுக்கக் கூடிய காரணியாக அவர் இருப்பார் என நம்புகிறோம். ரிஷப் பந்த் ஒருமுறை ரன்கள் சேர்க்க தொடங்கி விட்டால் அவர் மிகப்பெரிய வீரராக உருவெடுப் பார். இலக்குகளை துரத்தும் போது இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது.

அதேவேளையில் முதலில் பேட்டிங் செய்தால் வேறுவிதமான அச்சமின்மை தேவை. நாங்கள் இலக்குகளை துரத்தும் போது எதை அடைய வேண்டும் என்பதை அறிந்திருப்பதால் எங்களது திட்டங்களை சரியாக திட்டமிடுகிறோம். மும்பை டி 20 ஆட்டத்தில் நாங்கள் முதலில் பேட் செய்த விதம் அனைத்தையும் பூர்த்தி செய்தது. அதை அப்படியே தொடர்வதை எதிர்நோக்குகிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து