முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அபித் அலி

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

ராவல் பிண்டி : இலங்கைக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அபித் அலி உலக சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அபித் அலி. 32 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின் ராவல்பிண்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். டிராவில் முடிந்த இந்த டெஸ்டின் கடைசி நாளான நேற்று அபித் அலி சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் போட்டியிலும், டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் போட்டியிலும் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து