முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஜார்க்கண்ட்டில் இன்று வாக்கு எண்ணிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 23-ம் தேதி எண்ணப்படுகிறது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் அந்த இடங்களை எந்த கூட்டணியும் பிடிக்க முடியாது என்றும், தொங்கு சட்டப்பேரவையே அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என சில கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதால் தனித்துப் போட்டியிட்ட பாபுலால் மராண்டி மற்றும் சுதேஷ் மகாதோவும் கிங் மேக்கர்களாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் சுதேஷ் மகாதோ ஜார்க்கண்டில் தற்போதைய பா.ஜ.க. கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ளனர். பாபுலால் மராண்டி முன்னாள் பா.ஜ.க. முதல்வர். இவர்கள் எடுக்கப்போகும் முடிவு ஜார்க்கண்ட் அரசியலில் முக்கிய பங்காற்றும் எனத் தெரிகிறது. அதுபோலவே காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்தால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து