முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.எல். கால்பந்து: டிராவில் முடிந்தது ஐதராபாத் - கொல்கத்தா ஆட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத் - கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் அரங்கேறிய 43-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் சந்தித்தன. இதில் 15-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் ஐதராபாத் வீரர் போபோ தலையால் பந்தை முட்டி கோலுக்குள் அனுப்பி சமனுக்கு கொண்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகமானது. 85-வது நிமிடத்தில் போபோ மீண்டும் ஒரு கோல் போட்டார். இதன் பிறகு கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா மறுபடியும் ஒரு கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். ராய் கிருஷ்ணா இந்த சீசனில் அடித்த 8-வது கோல் இதுவாகும்.முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து