முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் முதல்வராகும் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் முதல்வராக பதவியேற்கவுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று  எண்ணப்பட்ட நிலையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அம்மாநிலத்தில் விரைவில் முதல்வராக பதவியேற்கவுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநிலத்துக்கு சேவையாற்றவுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துக்கள். ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பல ஆண்டுகள் சேவையாற்றும் வாய்ப்பை பா.ஜ.க.வுக்கு அளித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்களை பாராட்டுகிறேன். ஜார்க்கண்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவதுடன் வருங்காலத்தில் மக்கள் தொடர்புடைய பிரச்சனைகளுக்காக குரல் எழுப்புவோம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து