முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் சானியா

புதன்கிழமை, 25 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : பெடரேஷன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

கடைசியாக 2016-ம் ஆண்டு பெடரேஷன் கோப்பை தொடரில் களமிறங்கிய சானியா, 2017-ல் குழந்தை பிறந்த பிறகு டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார். தற்போது மீண்டும் முழு உடல்தகுதியுடன் தயாராகி உள்ள அவர் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாட உள்ளார்.  பெடரேஷன் கோப்பை அணியில் அங்கிதா ரெய்னா, டியா பாட்டியா, ருதுஜா போசலே, கர்மான் கவுர் தண்டி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். விஷால் உப்பல் கேப்டனாகவும், அங்கிதா பாம்ப்ரி பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து