முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் அமோக ஆதரவு: மதுரையில் ஓ.பி.எஸ். பேட்டி

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை பொது மக்கள் வெகுவாக ஆதரித்து வருகின்றனர். அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. சிறந்த நிர்வாகத்தில் தேசிய அளவில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு நல்லாட்சி நடைபெற்று வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து