முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி சிலையை திறந்து வைத்தார் நிதிஷ் குமார்

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா : பீகார் மாநிலம் பாட்னாவில் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் சிலையை அம்மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று திறந்து வைத்தார்.  

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு பா.ஜ.க.வுக்கு பேரிழப்பாய் அமைந்தது. 

இதற்கிடையே, முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் சிலை அமைக்கப்படும். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி சிலையை அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று திறந்து வைத்தார்.

அருண் ஜெட்லி பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல் மந்திரி சுஷில் மோடி மற்றும் அருண் ஜெட்லி குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து