முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை: பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தேர்வு குறித்த பிரதமர் மோடியின் உரையாடல் நிகழ்ச்சிக்காக ஜனவரி 16-ல்   விடுமுறை ரத்து என்பதை மறுத்துள்ள பள்ளி கல்வித்துறை, பொங்கல் விடுமுறை  ரத்து செய்யப்படாது எனவும், மாணவர்கள் வீடுகளில் இருந்தும் பிரதமரின்  உரையை பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி 16-ல் தேர்வு குறித்து பிரதமர் மோடியின் உரையை கேட்க 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் தவறாமல், பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாக செய்தி வெளியானது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்படாது. ஜனவரி 16-ம் தேதி பிரதமர் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பமிருந்தால், பள்ளிகளில் காண ஏற்பாடு செய்யவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அனைத்து மாணவர்களும் பளளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்படவில்லை என தெரிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி ஒன்றில், பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது பள்ளிக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து