முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : உடுப்பி பெஜாவர் மடத்தின் ஜீயரான சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் உடல்நலக் குறைவால் நேற்று காலை காலமானார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்து வருபவர் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர். 88 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.    மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் உடுப்பியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார் என உடுப்பி பெஜாவர் மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் காலமானதை அறிந்த முதல் மந்திரி எடியூரப்பா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து