முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் கடந்த நவம்பரில் பெய்த கனமழையால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் நிறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், பருவமழை காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.790 அடியாக குறைந்து உள்ளது.

அணையில் நீர்இருப்பு 91.55 டி.எம்.சி.யாகவும், அணைக்கு நீர்வரத்து 2,114 கனஅடியாகவும் உள்ளது. நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து