முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30 வார்டுகளில் நாளை மறுதேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 9 மாவட்டங்களில் உள்ள 30 வார்டுகளில் நாளை மறுதேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

வாக்குச் சாவடிகளில் வாக்குச் சீட்டுகளை மாற்றி வழங்குதல், வாக்குச்சீட்டுகளில் சின்னங்களை மாற்றி அச்சடித்தல், வா்ககுப்பெட்டிகளை கைப்பற்றுதல், போன்ற காரணங்களால் 30 வாக்கச்சாவடிகளில் நாளை (31 - ம்தேதி ) மறுதேர்தல் நடத்தப்படுகிறது. தர்மபுரி, அரூர் சிட்லிங் ஊராட்சியில் 217 எண் வாக்குசாவடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தின் வார்டு எண் 21 - ல் 9 வாக்குச்சாவடிகள் அதாவது 185, 186,187, 188,189, 190,192, 194,195 ஆகிய வாக்குச்சாவடிகள், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் உள்ள சென்னகரம்பட்டியில் 144 வது வாக்குச்சாவடி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொள்ளிடம் ஊராட்சியில் வார்டு எண் 20 -ல் 159 வது வாக்குசாவடி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் ஊராட்சி ஒனறியத்தில் பெருமாத்துார்  69 வது வாக்குசாவடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் வாக்குச்சாவடிகள் 107, 108, 109,110, 111, 160, 161, 162, 163, 164 ), தஞ்சாவூர் திருவிடை மருதூர் ஊராட்சியின் செம்மங்குடி ஊராட்சியின் 203 வது வாக்குச்சாவடி,திருவள்ளூர் கடம்பத்தூர், பாப்பரம்பாக்கம் 83 மற்றும் 84 வது வாக்குசாவடிகளிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தாங்குளம் நெடுங்குளம் ஊராட்சியல் வாக்குசாவடி எண் 27 யிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும். இந்த வாக்குசாவடிகளில் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து