முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை இல்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு, தடைகோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொது செயலாளர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என இரண்டாக பிரித்து தேர்தலை நடத்த முடிவு செய்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தலை அறிவித்தது. முதல்கட்டத் தேர்தல் டிசம்பர் 27-ந்தேதி நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல் 30-ம் தேதி முடிந்துள்ளது.  ஆனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. எஞ்சியுள்ள மாவட்டங்களில் பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1996, 2001, 2006 மற்றும் 2011 - ம் ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளுக்குச் சேர்த்தே நடத்தப்பட்டது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தனித்தனியாக நடத்துவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. ஊராட்சி உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. அதே நேரம் பஞ்சாயத்து வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி அதன் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட மனுவுக்கு விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பாராளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டாலும் முடிவுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுகிறது. எனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இந்த மனு விடுமுறை கால அமர்வில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து