முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் ஜனவரி 4 - ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் 24 - ம் தேதி விடப்பட்டது. ஜனவரி 2 - ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்த நிலையில், பள்ளி திறக்கும் தேதியில் பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்தது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக 3 - ம் தேதி திறக்கப்படும் என்று முன்பு  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் ஜனவரி 4 - ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து