முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்று இன்று போட்டி கோலம் - பா.ஜ.க மகளிரணி

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

 சென்னை : பா.ஜ.க. மாநில மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து (ஜனவரி 1-ந் தேதி) இன்று காலை அனைத்து இல்லங்களிலும் கோலம் போடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது   
 
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களுடன் தி.மு.க. மகளிரணி சார்பில் கோலம் போட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு போட்டியாக பா.ஜ.க. மகளிரணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்று கோலம் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பா.ஜ.க. மாநில மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஜனவரி 1-ந்தேதி(இன்று புத்தாண்டு காலை அனைத்து இல்லங்களிலும் கோலம் போடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தி.மு.க.- பா.ஜ.க. மகளிர் அணியினர் இடையே கோலப்போட்டி எழுந்து உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து