முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அமைச்சர் செல்லுார் கே.ராஜூ அதிகாரிகளுடன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் ராஜூ அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ,தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமையில், உயர் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லுார் ராஜூ அரசு எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாகவும், தற்போது வெங்காயம் வரத்து அதிகமாக உள்ள நிலையில் தொடர்ந்து விலை குறைந்து வருவது குறித்தும், 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வது தொடர்பாக துறையால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்து உரிய அறிவுரைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், ஆலோசகர் கார்த்திகேயன், கூடுதல் பதிவாளர்கள் முனைவர் க. ராஜேந்திரன், அந்தோணிசாமி ஜான் பீட்டர், ஆர்.ஜி. சக்திசரவணன், பாலமுருகன், இரா. பிருந்தா, கோ.க.மாதவன், டாக்டர் டி. அமலதாஸ், வெ.லட்சுமி, செந்தமிழ்ச்செல்வி, செந்தில்குமார், எம்.முருகன், ஆர்.இந்துமதி, லோகநாதன், என். மிருணாளினி மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து