முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் பெற்ற தமிழகம் முதல்வர் இ,பி,எஸ்,க்கு வாழ்த்துக்கள் குவிகின்றன - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் வாழ்த்து

புதன்கிழமை, 1 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : மத்திய அரசு நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சிறந்த நிர்வாக குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன, நிர்வாக குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றமைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்,

சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் அலுவலகத்திற்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார், இதைத்தொடர்ந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பாடநூல் வாரியத் தலைவர் பா,வளர்மதி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கிரின்வேஸ் ரோட்டில் துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, ரமணா, வரகூர் அருணாசலம், மணிகண்டன், பொன்னையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், அண்ணா தொழிற்சங்கப் பேரவை ஒருங்கிணைப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.டி.கே. ஜக்கையன், அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சேதுராமன், மீனவர் பிரிவு செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி, வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், தமிழக வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், மரகதம் குமரவேல், திருப்போரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான தையூர் குமரவேல், முன்னாள் கவுன்சிலர் சைதை எம்.எம். பாபு ஆகியோர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தனித்தனியே நேரில் சந்தித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து