முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் பிளவை ஏற்படுத்த முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

எங்கள் கூட்டணிக்குள் பிளவை உண்டாக்க நினைக்கிறார்கள். இதற்கு பா.ம.க.வும் இடம் தராது, நாங்களும் இடம் தரமாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஒரு வரைமுறை இருக்கிறது. நெல்லை கண்ணன் பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து இருக்கிறது. தமிழ் நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பினால் எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் கிடையாது என்று ஏற்கனவே தெரிவித்து விட்டனர். பா.ம.க. கூட்டணியால்தான் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்கிறது என்று அன்புமணி சொல்லியிருக்கிறார். ஏதோ உள்ளே நடந்த கூட்டத்தில் சொல்லி இருக்கலாம். உள்ளே நடக்கும் கூட்டத்தில் பேசுவதற்கு என்னால் கருத்து சொல்ல  முடியாது. இந்த வி‌ஷயத்தை பெரிதாக்கி எங்கள் கூட்டணிக்குள் பிளவை உண்டாக்க நினைக்கிறார்கள். இதற்கு பா.ம.க.வும் இடம் தராது. நாங்களும் இடம் தர மாட்டோம். உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. நல்லாட்சி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து