முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக்குறைவால் மரணமடைந்த பி.எச். பாண்டியன் உடலுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். மலர்வளையம் வைத்து மரியாதை

சனிக்கிழமை, 4 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

 சென்னை : உடல்நலக்குறைவால் மரணமடைந்த பி.எச். பாண்டியன் உடலுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க. சட்ட ஆலோசகரும், தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகருமான டாக்டர் பி.எச்.. பாண்டியன் உடல்நலக் குறைவால் மரணமடைந்ததையொட்டி, சென்னை, அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அவருடைய  உடலுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கும், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியனுக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆறுதல் கூறினார்.

மேலும்,  அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி. முனுசாமி, அமைப்புச் செயலாளர்கள் பொன்னையன், நத்தம் இரா. விசுவநாதன், செய்தி தொடர்பாளர்  கோகுல இந்திரா, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்  ரமணா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மாதவரம் மூர்த்தி,  பேரவை துணைச் செயலாளர் ரமேஷ், வட சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்  பாலகங்கா, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டசெயலாளர் ராஜேஷ், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டசெயலாளர்  வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள்  பி.எச். பாண்டியன் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து