முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில்   மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு விண்ணபிக்க நாளை  கடைசி நாளாகும். 

இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்   ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2018-ல் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து