முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிய மருத்துவ கல்லூரிகள் கட்ட ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 புதிய மருத்துவக் கல்லூரிகளுடனான மருத்துவமனை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய 6 இடங்களில் புதிய மருத்துவமனைகள் அமைக்க தமிழக அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கியது. இதன் தொடர்ச்சியாக, மேலும் 3 இடங்களில் அமைக்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள மருத்துவமனைகளுக்கு ஆரம்பக்கட்ட பணிகளுக்கு தலா ரூ. 70 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து