எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாகவே நடத்தி உள்ளது. அதிகாரிகள் நீதியுடனும்,, தர்மத்துடனும் செயல்பட்டுள்ளனர். அதனால் தான் 450 சுயேட்சைகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்று தி.மு.க.புகாருக்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் பேசும் போது, உள்ளாட்சி தேர்தல் பற்றி குறிப்பிட்டார். அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் எழுந்து ஓட்டு எண்ணும் இடத்திற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சென்று அதிகாரியை மிரட்டியிருக்கிறார். இந்த தேர்தல் நியாயமாக நடந்ததா? என்று கேட்டார்.
அப்போது அமைச்சர் பி.தங்கமணி எழுந்து, உங்கள் கட்சியை சேர்ந்த தருமபுரி எம்.பி. ஓட்டு எண்ணும் இடத்துக்கு போனாரே? அதிகாரியை பார்த்து எப்படியெல்லாம் பேசினார். அதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது. ஒன்றிய வார்டு தேர்தலில் 12 ஓட்டு வித்தியாசத்தில் நாங்கள் தோற்றோம். சுயேச்சை வெற்றி பெற்றார். இதெல்லாம் தேர்தல் நேர்மையாக நடந்தது என்பதற்கு உதாரணம். ஒருவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாங்கள் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டோம். அதற்கு முடியாது என்று அதிகாரி கூறி விட்டார் என்று அமைச்சர் சுட்டிக் காட்டி தேர்தல் நேர்மையாக, நியாயமாக நடந்தது என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில் தி.மு.க. மாவட்ட செயலாளரே ஒன்றிய குழு முகவர் அட்டை அணிந்து கொண்டு எல்லா இடத்துக்கும் சென்றார். காவல் துறை அதிகாரியை ஒருமையில் பேசி இருக்கிறார். உள்ளே வாக்குவாதம் செய்து மிரட்டி இருக்கிறார். இதற்கெல்லாம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர், இந்தத் தேர்தல் சரியான முறையில் நடைபெறவில்லை என்று இங்கே ஒரு குற்றச்சாட்டை சொன்னார். நான் உண்மையாகச் சொல்கின்றேன். எந்த இடத்திலும், எந்தத் தவறும் நடைபெறவில்லை. அரசு ஊழியர்கள்தான் இந்த வாக்குகளை எண்ணினார்கள். அப்படியென்றால், அரசு ஊழியர்கள் தவறு செய்தார்களா? ஆசிரியர்கள் எண்ணினார்கள், அரசு அதிகாரிகள் எண்ணினார்கள். காலை 8 மணிக்கு துவங்கி, அடுத்த நாள் காலை 10 மணி வரை நின்று கொண்டே எண்ணினார்கள். தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். அத்தனை முகவர்களுமே தடுப்புக்கு வெளியேயிருந்து தான் பார்க்கிறார்கள். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, சுயேட்சையாக இருந்தாலும் சரி. ஆகவே இதில் எந்தத் தவறும் நடைபெறவில்லை. என்னுடைய தொகுதியில் நங்கவள்ளி ஒன்றியத்திலே இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள், ஒருவர் 11 வாக்குககள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். மற்றொருவர் 17 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இரண்டு பேரும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.
இதை எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேசுகின்ற பொழுது அது பத்திரிகைகளில் வெளிவருகின்றது. ஆகவே, இதில் பணியாற்றிய அதிகாரிகளுக்கெல்லாம் ஒரு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என்பதற்காகத்தான் இதை நாள் தெளிவுபடுத்துகின்றேன். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும், தேர்தல் ஆணையம் முறையாக தேர்தல் நடத்தியிருக்கின்றது. அந்தத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் நேர்மையோடும், நீதியோடும், தர்மத்தோடும், நடுநிலையோடும் செயல்பட்டிருக்கின்றார்கள். எந்தக் கட்சியையும் சாராத 450 சுயேட்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால் அது சாதாரண விஷயமல்ல. அவர்கள் ஆளும்கட்சியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது. உங்கள் கூட்டணிக் கட்சிகளில் இடம் பெற்றவர்களும் கிடையாது. எங்கள் கூட்டணிக் கட்சிகளில் இடம் பெற்றவர்களும் கிடையாது. ஆகவே, எந்த ஒரு பின்புலமும் இல்லாத சுயேட்சைகள் கூட வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால், தேர்தல் ஆணையம் மூலமாக இந்தத் தேர்தல் சிறப்பாக, நடுநிலையோடு நடைபெற்றிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 43.73 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கிறது. தி.மு.க. கூட்டணி 45.32 சதவிகிதம் பெற்றிருக்கிறது. நீங்கள் 1.59 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தான் இருக்கிறீர்கள். அதே போல. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் 39.60 சதவிகித வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணி பெற்றிருக்கிறது. தி.மு.க. கூட்டணி 40.35 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கிறது. 0.75 சதவிகித வாக்குகள் தான் நீங்கள் அதிகமாக பெற்றிருக்கிறீர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.