முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை - சென்னை வானிலை மையம் தகவல்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை 2 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வட கிழக்கு பருவமழை முற்றிலும் முடிந்து விடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புவியரசன் மேலும் கூறியதாவது, தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் முடிந்து விடும்.  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. வறண்ட வானிலையே நிலவும். அதிகாலையில் பனிப்பொழிவு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் இயல்பை விட 16 சதவீதம் மழை குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக பெய்திருக்க வேண்டிய 76 செ.மீ.க்கு பதில் 64 செ.மீ. மழை பெய்துள்ளது. ஜனவரியில் 3.4 செ.மீ. மழை பெய்துள்ளதால் சென்னைக்கு மொத்தத்தில் 10 சதவீதம் மழை குறைவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் 64 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது. மேலும் ராமநாதபுரம், நெல்லையில் 45 சதவீதம், தூத்துக்குடியில் 31 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை. வேலூரில் 24 சதவீதம் பருவமழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து