முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்ணைக்குட்டைகள் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ்க்கு ஸ்காட்ச் விருது

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2020      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ்க்கு ஸ்காட்ச் விருது வழங்கப்பட்டுள்ளது.
 இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சமூக அக்கறையுடன் செயல்படும் தனிநபர்கள், சமுதாய மேம்பாட்டிற்காக சிறப்பாக செயல்படும் பொதுத்துறைஃதனியார்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை அங்கீகரித்திடும் விதமாக ஸ்காட்ச் என்ற அமைப்பு பல்வேறு காரணிகளை கணக்கிட்டு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.  அந்த வகையில், தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் நலனுக்காக 100 சதவீதம் அரசு மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 1526 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏறத்தாழ 97 மில்லியன் கனஅடி அளவில் மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2018-19 மற்றும் 2019-20 ஆகிய நிதியாண்டுகளில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தினை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ்க்கு ஸ்காட்ச் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து