முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - ஜனவரி 31-ல் தொடக்கம்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

ஜனவரி 31-ல் தொடங்கும் பாராளுமன்ற முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. ஜனவரி 31-ல் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தொடரின் 2-வது பகுதி மார்ச் 2-ம் தேதி தொடங்கும். அந்த தொடர் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து