முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்பயா கொலையில் முகேஷின் கருணை மனு நிராகரிப்பு: 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிட வேண்டும்: டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012-ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கியெறியப்பட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று இப்போது வெளியில் உள்ளான். எஞ்சிய முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து இவர்களுக்கு வரும் 22-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, முகேஷ் தாக்கல் செய்த கருணை மனுவை டெல்லி துணை நிலை கவர்னர் நிராகரித்தார். இதனிடையே தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, முகேஷ்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பினார். இந்த கருணை மனுவை ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் நேற்று காலை அனுப்பி வைத்தது. அப்போது இந்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து சட்ட நிபுணர்களுடன் ஜனாதிபதி இது குறித்து கலந்து பேசினார். அதன் பிறகு தனது முடிவை வெளியிட்டார். அதில் குற்றவாளி முகேஷ் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் முகேஷ் சிங்கை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கியதாக கூறப்பட்டது. 

முன்னதாக குற்றவாளிகள் தூக்கில் போடுவது தாமதம் ஏற்பட்டதால் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீர் வடித்தார். அவர் கூறுகையில்,

எனது மகள் மரணத்தை வைத்து அரசியல் விளையாட்டு நடக்கிறது. தூக்குப்போடும் நாளை தள்ளிப்போட கூடாது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக சிலர் நடந்து கொள்கிறார்கள்.  இத்தனை ஆண்டுகளா நான் கோர்ட்டுக்கு நடையாய் நடந்து விட்டேன். டெல்லி மாநில அரசு நடவடிக்கைகளிலும், திகார் ஜெயில் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். என் மகள் கொல்லப்பட்டதற்கு உரிய நீதி வேண்டும். அந்த நீதியை கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று மதியம் நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து