எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில் : களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு சதி திட்டம் வகுத்து கொடுத்து, அதனை நிறைவேற்ற வழிமுறைகளை கூறிய பெங்களூரு பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். இவரை சேர்த்து 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான அப்துல் சமீம், தவுபீக் இருவரும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை. சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுக்க குமரி மாவட்ட போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை (20-ந்தேதி) விசாரணைக்கு வருகிறது.
உபா சட்டம்
இதற்கிடையே கைதான அப்துல் சமீம், தவுபீக் இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சட்டத்தின் கீழ் இவர்களை 30 நாட்கள் வரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கலாம். மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரிக்க முடியும். இதற்கிடையே அப்துல் சமீம், தவுபீக் தொடர்பான பின்னணி குறித்து தமிழக கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், இருவருக்கும் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும், இப்போது இவர்கள் அல்ஹந்த் என்ற இயக்கத்தை தொடங்கி இளைஞர்களை சேர்த்து வருவதும் தெரிய வந்தது. இந்த இயக்கத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தனித்தனி தலைவர்கள் இருப்பதும், அந்த தலைவர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்து பயங்கரவாத பயிற்சி அளிப்பதும், கியூ பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது.
இத்தகவல்களை திரட்டிய தமிழக கியூ பிரிவு போலீசார் குஜராத், டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இந்த இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 17 பேரை கைது செய்தனர். இதில், டெல்லியில் கைதான செய்யது அலி நவாஷ் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலையில் கைதான அப்துல் சமீமின் கூட்டாளி. இதன் மூலம் எஸ்.ஐ. வில்சன் கொலையில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதிய கியூ பிரிவு போலீசார், கைதானவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
மூளையாக செயல்பட்டவன் கைது
இதில், எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வாங்கிக் கொடுத்தது பெங்களூரைச் சேர்ந்த மெகபூப் பாஷா என்பது தெரிய வந்தது. மெகபூப் பாஷா, அவரது மும்பை கூட்டாளி இஜாஷ் பாஷா மூலம் 5 துப்பாக்கிகளை வாங்கி வந்து அவற்றை அப்துல் சமீம் உள்பட சிலருக்கு கொடுத்துள்ளார். துப்பாக்கி கிடைத்ததும், அப்துல் சமீம், களியக்காவிளை வந்து தவுபீக்கை தன்னுடன் சேர்த்து கொண்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். இதன் மூலம் எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு சதி திட்டம் வகுத்து கொடுத்ததும், அதனை நிறைவேற்ற வழிமுறைகளை கூறியதும் பெங்களூரு பயங்கரவாதி மெகபூப் பாஷா என்பது கியூ பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து மெகபூப் பாஷாவை பிடிக்க கர்நாடகா போலீசாருக்கு தமிழக கியூ பிரிவு போலீசார் தகவல் கொடுத்தனர். கர்நாடகா போலீசார், மெகபூப் பாஷாவின் இருப்பிடங்களை கண்காணித்தனர். இதில் அவர், பெங்களூரு மாநகர பகுதியில் குருப்பனாபால்யா பகுதியில் மறைந்திருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அங்கு அதிரடியாக சென்ற கர்நாடக போலீசார் மெகபூப் பாஷாவை கைது செய்தனர். இந்த தகவல் தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
மெகபூப் பாஷா கைதானது குறித்து பெங்களூரு போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
17 பேருக்கு மூளைச் சலவை
மெகபூப் பாஷா, பெங்களூருவில் சமய வகுப்பு நடத்தி வந்துள்ளார். இங்கு பயில வந்த இளைஞர்களுக்கு பயங்கரவாத கருத்துக்களை கற்றுக் கொடுத்து மூளைச் சலவை செய்துள்ளார். இதன் மூலம் அந்த இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டி உள்ளார். இவர் மூலம் சுமார் 17 இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத செயல்களை வழி நடத்தும் கர்நாடக மாநில தலைவராகவும் மெகபூப் பாஷா இருந்துள்ளார். மெகபூப் பாஷாவால் மூளை சலவை செய்யப்பட்டவர்களில் அப்துல் சமீம், தவுபீக் இருவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.
6 பேரை பிடிக்க தீவிர வேட்டை
ஏற்கனவே இம்ரான்கான், ஹனிப்கான், இஜாஷ் பாஷா, லியாகத் அலி உள்பட 11 பேர் கைதாகி இருக்கிறார்கள். இன்னும் 6 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் கைது செய்ய தமிழக கியூ பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் கைதான மெகபூப் பாஷாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.